Thursday 16 July 2015

மாமியார் - மருமகள் உறவு :

மாமியார் - மருமகள்  உறவு :

நமது முன்னோர்கள் பெயர்கள் கண்டறியும்போதே மருமகள்/ மருமகன் என்று சுட்டுகின்றனர். இன்னொரு மகன்/ மகள் என்றே இதற்கு பொருள்.

தான் பெற்று வளர்த்த மகனை  தனக்கென்று ஒரே ஆதாரமாக நினைப்பவள் தாய், தன்னை மணந்த கனவுருக்காக தன்னுடைய பெற்றோர், உறவினர், நண்பர்கள், ஊர், படிப்பு, விருப்பங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வருபவள் மனைவி. இதில் மகன் மேல் அதிகமான அன்பு செலுத்துவது யார் என்பதில் தான் சண்டை வருகிறது. 30 வயது வரை மகனுக்கான கடமைகளை செய்த தாய் 30 வயதுக்கு மேல் வருகின்ற மனைவியை செய்யவிட்டு ஆனந்தப்பட வேண்டும். அதில் குறைகள் இருந்தால் எடுத்துரைக்க வேண்டும். மருமகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
மகனும் மருமகளும் இல்லறத்தை நல்லறமாக மாற்ற உதவ வேண்டும்.
கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்ட்டப்பட்டு வாழ வழிக்காட்ட வேண்டும்.
மகனை தன்  கைக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைகாதீர்கள், அது சாத்தியம் இல்லை. அதனால் உங்கள் மகன் உங்களிடம் நடிக்கத்தான் செய்வான். அதை விடுத்து மருமகளை கைக்குள்ளே போட்டுக்கொள்ள முனைப்புடன் செயல்படுங்கள் அது எளிதானது .
தாய் என்பவள் இறந்தகாலம் மனைவி எதிர்காலம் இதில் இரண்டுமே அவனுக்கு தேவை, இறந்தகாலத்தின் அனுபவம் எதிர்காலத்தின் அரவணைப்பு அவனுடைய இரு கண்கள் போல.

எளிமையாக கூறவேண்டும் என்றால்:
மகனும் மருமகளும் பண்டிகைக்காக துணி வாங்க செல்லும்போது,
மாமியார் மகனை பார்த்து :: "உன் மனைவியின் விருபத்திற்கு ஏற்றவாறு புடவை வாங்கித்தா , செலவை யோசிக்காதே அவளுடைய சந்தோஷத்தை யோசி" என்று கூறுங்கள் .
அது உங்கள் மருமகளையும் உங்களையும் சேர்த்து மகழ்ச்சி ஆக்கும். உங்களுக்கும் சேர்த்து புடவை வாங்கி வருவாள் ;முக்கியமாக முழு மனதோடு வாங்கிவருவாள்.
யாரை எப்படி எங்கே பிடித்தால் வேலை நடக்கும் என்ற வாழ்க்கை சூட்சமத்தை நாம் அறிய வேண்டும்.
குடும்பத்துடைய ஆணிவேராக செயல்படுவது மருமகள். அவளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துதல் மூலமாகவே குடும்பம் என்ற ஆலமரம் தழைக்கும் .
 மாமியார் மருமகள் சண்டை வரும்போது அதில் மற்றவர்கள் கருத்து கூறுதல் கூடாது , ஏன்  என்றால் அவரவர் கண்ணோட்டம் வேறு மாதிரி இருக்கும் அது சண்டையை தீர்க்காமல் இன்னும் பெரிதாக்கிவிடும்.
இதை அவர்கள் இருவருமே எப்படி தீர்ப்பது ?

1.முதலில் சண்டை ஏற்பட்ட காரணத்தை கண்டறியுங்கள், நடுவுநிலைமை கொண்டு சிந்தியுங்கள்( இதற்க்கு நேரம் இல்லை என்றால் இன்னொருவர் நிலையில் நின்று சிந்தியுங்கள், காரணம் தெளிவாக தெரியும்).
2.உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் " என் குடும்பம் என்னை வில்லியாக, கெட்டவளாக பார்க்க வேண்டுமா?
3.எப்படி சரி செய்வது என்று சிந்தியுங்கள் செயல்படுங்கள்
4. தற்பெருமையை(ஈகோ) மற்றும் பொறாமையை  முதலில் விடுங்கள்
 நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இந்த சண்டையில் பாதிக்கப்படுவது நீங்கள் நேசிக்கும் மகன்/கணவர்.
மாமியார் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்::

1. மருமகளை உங்கள் மகளாக பாருங்கள் , உங்களுக்கு கடைசி காலத்தில் கை பிடித்து செல்ல ஒரு துணையாக மாற்றுங்கள்.

2.உங்கள் மகனின் மீது ஆதிக்கம் செலுத்தாதீர்கள், உங்கள் வளர்ப்பு முறையாக இருந்தால் அவன் உங்களை எப்போதும் விட்டுவிடமாட்டன் . நீங்கள் உங்கள் கணவரிடம் எதிர்ப்பார்த்த அன்பைத்தான் உங்கள் மருமகளும் எதிர்ப்பார்ப்பாள்  (Encourage your son to build, develop, and define his marriage role. Don’t fight for position by grasping and grabbing for your son’s time and emotions.)

3.மகன் மருமகள் இல்லற வாழ்க்கை வெற்றி அடைந்து அவர்கள் 16 செல்வமும் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.

4.பிரச்சனை வரும்போது அதை கண்டும் கானமல்  இருக்காமல் அதை இன்னும் பெரிதாக்காமல் மனம் விட்டு பேசுங்கள் . உங்களுக்கு ஏற்ப்பட மனகசப்பை பகிருங்கள். தவறை திருத்திக்கொள்ள இதுவே ஆரோக்கியமான வழி. மனதை விட்டு பேசுங்கள் , உரையாடலுக்கு உள்ள சக்தி அதிகம்.

5.மருமகளை புகழ்ந்து பேசுங்கள்; குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.அவளை மேற்பார்வை இடாதீர்கள்
(“Honor your daughter-in-law in the presence of your son. Compliment your daughter-in-law; never criticize or supervise.”)

6.கேட்கப்படும்போது மட்டுமே உங்கள் அறிவுரை - ஆலோசனைகளை பகிருங்கள்.

7.உங்களை போன்றே உங்கள் மருமகள் இருக்கமுடியாது. அவளுடைய பண்புகளையும் மதியுங்கள்
(“Realize that your daughter-in-law wasn’t raised the same way you raised your son and maybe doesn’t have the same standards you have.
“Do not try to change her into who you would like her to be, A good mother-in-law encourages, accepts, and loves unconditionally.”)

8.உங்கள் மகனிடமும் குறைகள் காணப்படும் அது மனித இயல்பு .

9.அவர்களுடைய எதிர்கால கனவுகள் திட்டங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

10. புரிதல் மிக அவசியம். வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் மருமகளின் வீட்டு வேலைகளை பகிருங்கள் , அது உங்களுக்கும் நேரத்தை செலவு செய்ய உதவும். உங்கள் மகள் வந்தால் அனைத்து வேலைகளையும் அவளை உட்கார வைத்து செய்வீர்களே அது போல. செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு வார்தையாவது கேளுங்கள், மருமகள் மகிழ்ச்சி அடைவாள்.

11.அவர்களை தவறுகள் செய்ய அனுமதியுங்கள் அப்போதுதான் உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படும்
“Respect the decisions of your son and daughter-in-law, even if you don’t agree with them. Know that if their decision is a mistake, it will be a learning opportunity for them.”


12.நட்புறவு கொள்ளுங்கள், இதில் படித்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று இல்லாமல் , உங்கள் அனுபவங்கள், உங்களுடைய மாமியார் கதைகள், உங்கள் ஆரம்பகால் மணவாழ்க்கை, உங்கள் கனவு, உங்கள் தோழிகள் , உங்கள் மகனின் சிறு வயது குரும்புத்தனகள் அனைத்தையும் பகிருங்கள்
(“Spend time alone with your daughter-in-law doing things you both enjoy")

14. உங்கள் மகன் மற்றும் மருமகளிடம் நல்ல உறவு அமைத்துக் கொள்ளுங்கள்.

15. உங்கள் மாமியாரிடம் நீங்கள் பட்ட வேதனைகளை மருமகளும் பட வேண்டும் என்று பழிவாங்க நினைகாதேர்கள்.(Dont try to maintain grudge)

16.மகன் மருமகளிடம் சண்டை போடும்போது அவள் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் மகன் முன் அவளுக்கு பரிந்து பேசுங்கள், பிறகு தனியாக எடுத்துகூருங்கள்..

இப்போது மருமகள்கள் செய்ய வேண்டியன :

1. உங்கள் மாமியாரிடம் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தின் முன்னேற்ற சிறப்பு  அம்சங்களை எடுத்துக்கூறுங்கள்.(Keep her updated about the social happenings and progress of the society)

2. மாமியாரிடம் உங்கள் கணவரின் சிறு வயது கதைகளை கேட்டு மகிழுங்கள்.

3. உங்கள் பிள்ளைகளை மாமியாரிடம் முழு மனதோடு பார்த்துக்கொள்ள விடுங்கள், ஏன்  என்றால் உங்கள் கணவரை அவர்தான் வளர்த்து ஆளாக்கினார்.

4. அவ்வபோது ஒன்றாக கடைகளுக்கு செல்லுங்கள் அது உரையாடல், ஒற்றுமை வளர உதவும்.

5. உங்கள் எதிர்கால திட்டங்களை மாறிவரும் சமூக சூழ்நிலை ஆகியவற்றை விளக்குங்கள்.

6.உங்கள் குழந்தைகளை அவர்களுடன் இருக்கும்போது புகைப்படம் எடுங்கள் அது அவர்களுடைய மனதை சந்தொஷபடுத்தும்.
(What they'd love from you is any photos you snap and videos you take of their child reaching milestones, playing, or simply being adored by family)

7.நேரம் இருக்கும்போது ஒன்றாக கோயில் மற்றும் வெளியூர் பயணம் செல்லுங்கள்.

8. உங்கள் தாயை அவர் முன் பெருமைபடுத்தி பேசாதீர்கள்,உங்கள் தாயைப்போல அவருடைய மகனுக்கு அவரும் ஒரு தாய்.

9.சிறு வயதில் உங்கள் கணவர் எந்த உணவை விரும்பி சாப்பிட்டார் என்று கேட்டறியுங்கள், அதன் செய்முறையும் கேளுங்கள்.

10.அன்னையர் தினம் அவருடைய பிறந்தநாள் ஆகி முக்கிய தினங்களுக்கு வாழ்த்து கூறுங்கள், முடிந்தால் பரிசு பொருட்கள் வாங்கித்தாருங்கள்.

11. உங்களுடைய பிறந்ததினம் திருமண நாளையும் அவருக்கு முன்னரே நினைவூட்டுங்கள்.

12.சில நேரங்களில் பெண்ணைப் பெற்ற தாய்கலுக்கு தங்களின் செல்லமாக வளர்ந்த மகள் இன்னொரு வீட்டுக்கு செல்லும்போது அங்கே துன்பப்படுவளோ அவர்களால் மனவருத்தம் அடைவாளோ என்ற தவறான பயம் எழும்.
அதனால் தவறான அறிவுரைகள் வழிக்கட்டுதலைக் கூறுவார் , அப்போது சிந்தித்து செயல்படவேண்டியது மகளின் கடமை.


தன்னுடைய மகள் வேளைக்கு செல்வதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாமியார்க்கு  , தன்னுடைய மருமகள் வேளைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சம்பாரிக்கும் திமிரு என்னை மதிக்கமாட்டாள் என்று சொல்வர்.
தன்னுடைய மகள் தனிக்குடித்தனம் சென்றால் மகளின் சாமர்த்தியம் என்று புகழும் மாமியாருக்கு , தன்னுடைய மருமகள் தனிக்குடித்தனம் செல்வது குடும்பத்தை பிரித்த பேய் என்று கூறுவார்.
தன்னுடைய மகள் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் சென்று வருவதை எண்ணி மனம் வருந்தும் மாமியாருக்கு , மருமகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என்ற நினைப்பு.
அதேபோல,
அம்மா திட்டினால் குறை கூறினால் அதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதுக்கு தள்ளும் மருமகள் , மாமியார் சொல்லுவதை மட்டும் நேராக மூளைக்கு தள்ளுகிறாள்.
அம்மாவிடம் தன் மனக்கஷ்டங்களை பகிரும் மருமகள் அதையே மாமியாரிடம் சொல்ல தயக்கம் காட்டுகிறாள்.
அம்மாவுக்கு பொருட்கள் வாங்கும் மகள் மாமியார் ஏதேனும் வாங்கி வர சொன்னால் முனுமுனுகிறாள்.
                  விட்டுக்கொடுபவர்கள் கெட்டுப்போவதில்லை!


பொதுவாக பெண்கள் தன்  தாய்க்கு புடவை நகை வாங்கித் தருவதில் காட்டும் ஆர்வம் ஆசை அதிகம், காரணம் அது அவர்களுக்கு திரும்ப வந்து சேரும் என்று.
மாமியார் வேறு மருமகள் அல்லது மகளுக்கு அதை தந்துவிடுவார் என்ற பயம்.
மாமியார் மகளுக்கு பொருட்கள்  வாங்கிதருவதில் காட்டும் ஆர்வம் மருமகளிடம் காட்டுவதில்லை , காரணம் இன்னொரு வீட்டில் இருக்கும் தன்னுடைய மகளுக்கு அங்கே பெருமை சேர வேண்டும் என்ற எண்ணம்.

                                                அது அர்த்தம் அற்றது


மாமியார் மருமகள் இடையே மனகசப்பு பொறாமை இல்லாமல் அமையும் உறவு என்றும் நிலத்து இருக்கும். அதை யாராலும் பிரிக்க முடியாது , அதற்கு முதலில் தன தாயை போலவே மாமியாரையும் சமம் படுத்துதல், மகளை போலவே மருமகளை சமன்படுத்துதல் .
இருவரும் புரிந்துக்கொள்ள வேண்டியது ஈசன் தலையில் இடம்பிடித்த  கங்கை ஈசனின் மெய்யில் சரிபாதியான  சக்தி போல மகனுக்கு தாயும் மனைவியும் அமைய வேண்டும்.
மாமியார் மருமகள் உறவு ஒரு மெல்லிய கயிறு போன்றது அதை இரு முனைகளை நீங்கள் இருவர் பிடித்துக்கொண்டு இருகிறீர்கள்.அதை இழுத்து அருந்துபோகாமல் ஒருவர் இழுக்கும்போது ஒருவர் விட்டுகொடுத்து சென்றால் எப்போதும் கயிறு என்ற மகன் உங்களுடன் இருப்பான்.

Thursday 9 July 2015

தந்தை மகள் உறவு :

தந்தை மகள் உறவு :

இன்றைய நிலையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு அவளுடைய  கல்வி மற்றும் தொழில் சார்ந்த முடிவுகளையும், தங்கள் இலக்குகளை அடைய வெற்றி பாதை அமைப்பதையும், வருங்கால வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதையும்  தீர்மானிக்கின்றது.

இது எவ்வாறு சாத்தியம் ???

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கல்லூரி பெண்களிடம் :
அவர்களுடைய தந்தை , அவர்கள் தீர்மானிக்கும் தொழிலை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது? இதற்கு தந்தையுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தவர்கள் நாங்கள் அவர் சொல்வதை ஏற்றுகொள்வோம் , அதில் நன்மை இருக்கும் என்று கூறினார்கள். தந்தையுடன் நட்பு இல்லாதவர்கள் , நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றிகொள்ளமாட்டோம் என்று பதிலளித்தனர்.

எப்போதும் நம்முடைய எதிர்கால வாழ்க்கையை சந்தர்பத்தால் அல்லது நிர்பந்தத்தால் தேர்வு செய்யக்கூடாது, நம்முடைய மனவிருப்பதால் தேர்வு செய்ய வேண்டும்( Never decide your career based on choice or chance, decide it based on ur dreams and passion.)

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தன்  தந்தையுடன் பாதுகாப்பான, ஆதரவான  நட்புறவு பாராட்டும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாமே தீர்மானித்து அதில் வெற்றி அடைகின்றனர். தனக்கான கல்வி இலக்குகளை அடைவதிலேயே அவர்களுடைய கவனம் முழுவதுமாக ஈர்க்கபடுகிறது . வாழ்வியல் சந்தோஷங்கள், சுகங்கள் அவர்களை பாதிப்பதில்லை. தந்தை இல்லாத (அ ) தந்தை விட்டு சென்ற பெண்களே தன் குடும்பச்சுமையை சுமக்க நேரிடும்போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.வெளியில் தங்களை தைரியசாலிகளாக காட்டிக்கொண்டு உள்ளே கோழைகளாக வாழ்கின்றனர்.
பாதுகாப்பு உணர்வை பெண்கள் முதலில் தந்தையிடம் எதிர்பார்கிறார்கள். அது எளிதில் கிடைக்கும்போது அவர்களுடைய நாட்டம் வேறு எதிலும் செல்வதில்லை.
தன்னுடைய 20 வயது வரை தந்தையின் ஆதரவு இல்லாமல் வளரும் பெண்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகும்போது அதிகமாக உணர்ச்சிவசப்படுவதோடு  எதிர்த்து செயல்படமுடியாத சூழ்நிலை கைதிகளாகவே  இருப்பர். இதற்கு மறைமுக காரணம் குறைந்த அளவில்  கார்டிசோல்(Cartisol Harmone) சுரப்பது .
பருவம் அடைந்த பெண்கள் நமது சமூக அமைப்பு காரணமாகவே தந்தையிடம் இருந்து விலகி நிற்ப்பார். தாயிடம் மனம்விட்டு பேசும் அவர்களால் தந்தையிடம் அது இயலாது. இதை சரி செய்வது சுலபம்:
எதாவது ஒரு சூழலில் பாதுகாப்புணர்வையும் அரவணைப்பையும்  உணரும்போது பெண்கள் தந்தையிடம் ஒட்டிகொள்வர்.
தந்தையிடம் முதலில்  அமையும் உறவே கணவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முன்னோடி ஆக அமையும்.(So, a woman’s early relationship with dad, who is usually the first male object of her love, shapes her conscious and unconscious perceptions of what she can expect and what is acceptable in a romantic partner)




நம்முடைய எதிர்கால உறவுக்கான பாலமாக இது அமையும். நம் வாழ்கையை வடிவமைத்து பார்பதற்கு அழகாக அமைத்து தரும் நம் பெற்றோர்களிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுதல் மூலம் நாம் வாழ்வில் குறித்த இலக்கை எளிமையாக அடைய முடியும்.

இப்போது நாம் 3 பிரிவுகளில் உறவு மேம்படுத்தலை பாப்போம்:
1. அணுகுதல்
2.அமர்த்திக்கொள்ளுதல்
3. கடமை
  • நாம் நம் பிள்ளைகளை சுயசிந்தனை, சுய பரிசோதனை, சுயஅறிவு உடன் அனைத்து செயல்களையும் எதிர் நோக்க கற்றுத்தர வேண்டும், இதன் மூலமே அவர்களுடைய சுய மரியாதை பண்பு வளரும்.
  • பெற்றோர் தன்னுடைய பாதுகாப்புக்கு ஒன்று சேர்ந்த அரணாக இருப்பார்கள் என்பதை குழந்தை நம்ப வேண்டும். மகளிடம் அதிகமாக கட்டுப்பாடு விதித்தல் அவளுடைய தனி திறமைகளை புறக்கணித்தல், புது முயற்சியாளுக்கு முட்டுகட்டையாக இருத்தல் ஆகிய  செயல்கள் மகளை ஒட்டுண்ணியாகவே  வளர்க்கும்.
தங்கள் தந்தைகள்  (மற்றும் தாய்மார்கள்) நல்  உறவில்  வளர்ந்த பெண்கள், தங்களுக்கு ஏற்ற மணமகனை தேர்வு செய்கின்றனர். இதில் உணர்வுகளுக்கு அடிமைகள் ஆகாமல் சுய சிந்தனையுடன் செயல் பட்டு முடிவு எடுக்கின்றனர், ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் அவர்களால் ஆரோக்கியமாக  நட்பு பாராட்ட முடியும் . 
அனைத்து ஜீவராசிகளுக்கும் பாசம் உண்டு அதில் சிறப்பு வாய்ந்தது நாய்க்கு , அதுவே குழந்தை பருவத்தில் இருக்கும் தன் குட்டிகளை தன்னுடைய எஜமான் தொட்டால் கூட கோவம் கொள்ளும் அனால் ஒரு பருவத்திற்கு மேல் தன்னுடைய குட்டிகளை உதறிவிடும் , காரணம் அவர்கள் தாங்களாக யாரையும் சாராமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.இதைவிட வேறு என்ன உதாரணம் கூறிவிட முடியும்.

                                        "மகனிடம் மனம்விட்டு பேசுங்கள்
                                  மகளை மனம் விட்டு பேசவையுங்கள் "
                                      



Saturday 4 July 2015

தந்தை மகன் உறவு :

                               தந்தை மகன் உறவு :


தவழும் வயதில் மகனை தோள்களில் போட்டு உப்பு மூட்டை தூக்கி கொண்டு செல்லும் தந்தைகள் அவர்கள் பருவ வயது எட்டிய உடன் அவர்களை தோழனாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு பொருள் இருவரும் சேர்ந்து குடிபதிலும்  புகை பிடிபதிலும் இல்லை , ஒருவரை ஒருவர் தன வயதுக்கு இணையாக பார்க்க வேண்டும்(Treat urselves equally as friends).அப்போதுதான் உறவு வலிமை பெரும். தந்தையை பழைய பஞ்சாகமாக பார்க்காமல் அனுபவத்தின் ஊன்றுகோலாக மகன் பார்க்க வேண்டும். மகனை அறியாத பிள்ளை என்று  நினைக்காமல் மாற்றத்தினை நோக்கி ஓடிகொண்டிருக்கும் உலகத்தின்  வழிகாட்டியாக தந்தை பார்க்க வேண்டும்.
மனம் திறந்து பேசுவது எண்ணங்களை பகிர்வது தெரியாத செய்திகளை  கேட்டு தெரிந்து கொள்வது முரண்பாடான கருத்துகளையும் பகிர்வது இருவரின் கொள்கைகளும் எங்கே வித்யாசபடுகின்றன என்பதை பேசி ஆலோசனை செய்வதில் தான் உறவு  நிலைபெறும். 

தந்தை கோவமாக பேசினாலும் அதில் வெறுப்பு இல்லை, என்னை பற்றிய பயம் தான் இருக்கிறது என்று மகன் புரிந்துகொள்வது. மகன் வெறுப்பைக் காட்டினாலும் , அவன் வேறு ஒரு மனகவலையில் உள்ளான்  என்று உணர்ந்து, அதை என்னிடம் சொல் நான்  சரி செய்ய உதவுகிறேன் என்று தந்தை முன்வருவது இதில் தான் உள்ளது உறவு.
எப்போதும் கண்டிப்பு மட்டுமோ அல்லது அரவணைப்பு மட்டுமோ நல்லதன்று இரண்டும் சமமாக கலந்து இருத்தல் நலம். தந்தை பட்ட கஷ்டங்களை மகன் பட கூடாது என்று நினைத்து அவனுக்கு அனைத்து வசதிகளையும் தந்து வளர்ப்பது தவறு , ஏனென்றால் தான் பட்ட கஷ்டங்கள் தான் வாழ்கையின் அனுபவ பாடத்தை கற்றுத்தந்துள்ளது . மகனின் வாழ்வில் பின்னல் இருந்து வழி நடத்துவதே சிறந்தது அதை விடுத்து தோளில் தூக்கிக் கொண்டு இறுதி வரை நடக்க நினைத்தால் சோம்பேறித்தனம், மெத்தன போக்கு மட்டுமே எஞ்சி இருக்கும். 

பாச மழைகள்  காசு மழை போன்றே அதிகமானால் வேதனையில் முடியும். அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து வளர்ப்பது மகனின் எதிர்காலத்துக்கு உதவும் . சொந்த காலில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெற எண்ணம் தோன்றும்.அதிகமான பாசம் அரவணைப்பு மகனை ஒட்டுண்ணி ஆக மாற்றும்.சுதந்திரம் தேவையான தருணத்தில் வழங்கப்பட வேண்டும் அது வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உதாவும் . அதிகபடியான சுதந்திரம் தீய வழிக்கான  வாசல் ஆகவே அமையும்.

உறவில் நம்பிக்கை தான் முதல் விதையாக அமைகிறது. மகன் வழியில் வரும் பெருமை மகிழ்ச்சி எப்படி உங்களை சாருமோ அவன் வழியில் வரும் துன்பமும் உங்களையே சாரும்.

கால மாற்றம் நூற்றாண்டு மாற்றம் நமக்கு பாசத்தையும் பண்பையும் குறைத்து கொண்டே செல்கிறது. வரும்காலம் பாசம் பண்பு ஆகிய வார்த்தைகளை  அகராதி புத்தகத்தில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ளும்.
இதை மாற்றவேண்டிய கடமை நமக்கு உண்டு. பணம் காய்க்கும் மரமாக மட்டுமே தந்தையை பார்க்காமல் நம்மை வாழ்கை போராட்டத்தை எதிர்கொள்ள தயாராகும் ஆயுதமாக பாருங்கள்.

பணம் சம்பாரிப்பது அடுத்தவர்களை அடக்கி அல்ல்வது இல்லை ஆண்மை தன்னை சார்ந்தவர்களை அரவணைக்கும் தூணாக வலிமையில் இருக்கவேண்டும், அவர்களுடைய துன்பங்களுக்கு உருகும் மெழுகாக இருக்கவேண்டும் அவைகளுடைய கண்ணீரை துடைக்கும் காற்றாக இருக்க வேண்டும்.

இதையே தன மகனுக்கு கற்றுத்தர வேண்டும். பெண்களை தனக்கு சமமான துணையாக பார்க்க உதவ வேண்டும்.பெண்களை மதிக்க சொல்லித்தருவது உங்கள் மனைவியிடம் இருந்து ஆரம்பியுங்கள் அது தான் உங்கள் மகனுக்கு முதல் உதாரணமாக அமையும். 
அனைத்து செயல்களிலும் உங்கள் மகனுக்கு முதல் உதாரணம் முன்னுதாரணம் ஆக இருங்கள். சிறிய சிறிய செயல்களுக்கும் பாராட்டுகள் முதலில் பகிருங்கள் , உங்களுக்கு அற்பமான விஷயங்களாக  தோன்றுபவை உங்கள் மகன் வளர்ந்தபின் பெரிய விஷயங்களாக தோன்றும்.
அப்போது அவர்கள் உங்களை புறக்கணிப்பது  நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும் .
 பணம் வாழ்க்கைக்கு  தேவை அனால் பணத்தை உண்டு வாழ்க்கை இல்லை. 
உங்கள் தள்ளாத பருவத்தில் உங்கள் கைகளை பிடித்து நடக்க உங்கள் மனதுக்கு தனிமையை போக்கி இரண்டு வார்த்தைகள் பேச உங்கள் மகனை இப்போதே தயார்படுத்துங்கள்.
உங்கள் பழைய வாழ்கை நீங்கள் பட்ட துன்பம் முன்னேற பட்ட டிகள் அனைத்தையும் பகிருங்கள் அதன் மூலம் உங்கள் மகன் நீங்கள் பெற்ற அனுபவத்தை உணர்ந்துக் கொள்வான். 

மகன் தந்தையை உதறி தள்ளுவது இரண்டு கருத்துக்களை காண்பிக்கும் :
1. தந்தைக்கு முன்னோடியாக அவருடைய தந்தை அமையவில்லை 
2. மகன் தான் ஒரு தந்தை ஆகும் போது தானாக வருந்துவான்.

ஒரு மகன் தன்னுடைய 5 வயதில் கூறுவது:
என் தந்தை தான் எனக்கு ஹீரோ.
10 வது வயதில் கூறுவது :
எங்க அப்பா நல்லவரு ஆனா அப்போ அப்போ கத்துவாரு 
15 வது வயதில் கூறுவது:
அம்மா உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிவை என் ரூட்ல கிராஸ் பண்றாரு நல்லதில்ல 
20 வயதில் கூறுவது:
அம்மா எப்படி மா இந்த ஆள கல்யாணம் பண்ணிகிட்ட 
30 வயதில் கூறுவது:
நான்  எங்க அப்பா உடன் பேசுவதே இல்லை. எது செஞ்சாலும் தப்பு சொல்லுவாரு 
40 வயதில் கூறுவது 
எங்க அப்பா கத்திக்கிட்டு இருப்பாரு ஆனா பாவம் நல்லவரு 
50 வயதில் கூறுவது:
எவ்ளோ கஷ்டப்பட்டு எங்க அப்பா என்ன வளர்தாரு அவரு தான் எனக்கு எல்லாமே.
இப்படி தான் உறவு நிலை இருக்க வேண்டும். புரிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் புரிதலும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நேரத்தில் பகிர்தலும் தான் உறவின் பிடிப்புகள்.
                                 உங்கள் மகனிடம் கலந்து பேசுங்கள் !
                                     எப்போதும் கட்டளை இடாதீர்கள் !


Wednesday 1 July 2015

உறவுகள் தொடர்கதை .....

                                       உறவுகள் தொடர்கதை .....

                              தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. ஒரு மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன .

 மனிதன் படைத்த அனைத்திலும் சிறந்தது உறவுகள் நம் எண்ணங்கள் ஆசைகள் மகிழ்ச்சி விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள , ஒருவக்குஒருவர் ஊன்றுகோலாக இருந்து செயல்பட நமக்கு வித்திடுவது உறவு .
ஆனால் இன்று நடைபெறும் சில கசப்பான சம்பவங்களுக்கும் ஆரம்ப தூண்டுதலாக உறவு அமைந்துக்கொண்டு இருக்கிறது . இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லாமல் போவதுதான் . புரிதலுக்காக நாம் செய்ய வேண்டியது சூழ்நிலையில் நம்மை நிறுத்தி பார்ப்பது , அப்போதுதான் மற்றவருடைய வேதனையை  நம்மால்  உணரமுடியும்.

இப்பொழுது உங்களிடம் நான் பகிரபோவது உறவுகளை எப்படி வலிமையாக்கி கொல்வது என்றுதான் .